Posts

Showing posts from July, 2020
எந்திரங்களின் சக்தி, இனி எந்த முயற்சி செய்தாலும் பயன் கிடையாது என்று கைவிடப்பட்ட எத்தனையோ நபர்கள் மந்திர சக்தியால் யந்திரங்களின் துணையால் உயிர் பிழைத்து எழுந்து இருக்கிறார்கள். துன்பத்திற்கு மேல் துன்பம் தொடர்ந்து வந்து கொண்டிருக்க என்ன காரணம் என்பதை அறியாமல் தவித்த எத்தனையோ பெரும் செல்வந்தர்கள் முறையாக மந்திரவாதிகளைத் வரவழைத்து வீட்டில் யாகம் செய்து யந்திரங்களை மண் கலசத்தில் வைத்து வீட்டில் நான்கு மூலைகளிலும் முறையாக மந்திரம் சொல்லி புதைத்து வைக்க அந்த வீடுகளில் துன்பம் நிங்கி சுபிட்சம் பெருகி வந்தது. மந்திரங்களாலும் எந்திரங்களாலும் சாதிக்க முடியாதவை எதுவுமே இல்லை. வறுமை, நோய் இவை அறவே விலகி இல்லத்தில் ஏற்றம் பெறுவதற்கு மந்திரங்களோடு கூடிய எந்திரங்கள் அதர்வண வேதத்தில் உண்டு. இதனை அனுபவம் மிக்கவர்களோடு தயாரித்து வீட்டில் வைத்தால் நமது வாழ்வு மிகவும் சிறக்கும். சக்கரம், யந்திரம் மற்றும் மந்திர உச்சாடனம் இன்று நேற்று தோன்றியவை அல்ல. வழிவழியாக வந்து கொண்டு இருப்பவை. பீஜாட்சரங்களின் மூலம் உயிர் பெரும் சக்தியை உருவாக்கும் ‘வித்துக்கள்’ எழுந்து வடிவம் பெறும்...