அரகஜா பயன்கள்
அரகஜா.
மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அரகஜா இன்று நம் பலருக்குத் தெரியாமல் போன ஒரு தாந்திரீக பொருள் அரகஜா. இன்று நம்மில் பல பேருக்கு குலதெய்வங்கள் என்ன குலதெய்வங்கள் எது என்று தெரியாமல் பலபேர் இருக்கின்றனர், அவர்களின் குலதெய்வத்தை அவர்களின் வீட்டிற்கு வர வைக்கும் ஒரு தாந்திரீக பொருள் அரகஜா .இந்த சிவ வழிபாட்டிற்கும், காலபைரவரின் வழிபாட்டிற்கும், அபிஷேகத்திற்கு பயன்படும் ஒரு தாந்திரீக பொருள். அத்த,ர் புனுகு, ஜவ்வாது, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம் ,போன்ற இன்னும் பல மூலிகைப் பொருட்களால் உருவான பொருள். இதனுடைய பலன் அபரிமிதமானது, பலருக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றும், குலதெய்வத்தை வரவழைக்க இந்த அரகஜா மிகவும் நமக்கு துணை புரியும், வீட்டில் குலதெய்வத்திற்கு வழிபாட்டிற்கு மஞ்சள் அரகஜா இரண்டையும் ஒன்றாக கலந்து திலகமிட்டு குலதெய்வ வழிபாடு செய்தால் நம் குலதெய்வம் நம் இருப்பிடம் தேடி வரும். இதை நம் திலகமாக இட்டுக்கொண்டால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகள் இவைகளில் இருந்து விடுபடலாம். நம் குல தெய்வத்தின் அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம். மேலும் சிவனுக்கும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு அபிஷேகம் செய்வதற்கு இந்த அரகஜா நாம் தானமாக ஆலயத்திற்கு வாங்கி தரலாம் .இதனால் நமக்கு மிகப்பெரும் புண்ணியங்கள் வந்தடையும் ,மேலும் சனி திசை ,அஷ்டமச்சனி ,கண்டச்சனி ,ஏழரைச் சனி ,போன்ற சனியின் திசைகளின் பாதிப்பு விலகும். சனியின் புத்தி சனியினுடைய அந்தரம் போன்ற காலங்களில் இந்த அரகஜா அவை சனீஸ்வர பகவானை வணங்கி நெற்றியில் இட்டுக்கொண்டால் சனியினுடைய பாதிப்பு மிகவும் நம்மை விட்டு விலகும். இது மிகவும் அற்புதமாக வேலை செய்யும் ஒரு தாந்திரீக பொருள் .அரகஜா சனி திசை 19 வருடத்திற்கும், ஏழரை நாட்டு சனி காலத்திற்கும், இந்த அரகஜா தினம் திலகமாக இட்டு சென்றால் நமக்கு வரக்கூடிய பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள நம்மை பலப்படுத்தும் ஒரு தாந்திரீக பொருள். இதிலிருந்து வரும் சுகந்தமான மணம் நம் மனதை எப்பொழுதும் நேர்மையாக நேர் வழியில் இட்டுச் செல்லும் எப்பொழுதும் நம் மனதில் பாசிட்டிவ்வான எண்ணங்களை வரவழைக்கும் தூண்டும் மனதில் தீய எண்ணத்தை அறவே விலக்கி தெய்வ சிந்தனையும் தெய்வம் ஆற்றலையும் நம்மை சுற்றி பிரகாசிக்க வைக்கும் ,வீடுகளில் வழிபாடு செய்யக்கூடிய இடங்களில் வியாபாரம் செய்யக்கூடிய ஸ்தலங்களில் அரகஜா மஞ்சள் இவைகளை திலகமாக சுவர்களில் இட்டு வழிபாடு செய்தாலும் அந்த இடம் பாசிட்டிவான சக்திகளை வைத்து தெய்வீக ஆற்றலை அங்கு நடமாட செய்யும் ,இன்று பல யாகங்களும் பூஜைகளும் செய்து மன நிறைவு அடையாத அவர்களும் இந்த அரகஜாபயன்படுத்தி சனியினுடைய பாதிப்பிலிருந்து குலதெய்வத்தின் அருளைப் பெறவும் வாங்கி பயன் அடையுங்கள் .
குருவே சரணம். ராம்சரவணன்
Comments
Post a Comment