கிரக பரிகாரங்கள் 3

 நவகிரக பரிகாரங்கள் 3

மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நண்பர்களே ஒரு மனிதன் செல்வாக்குடன் வாழ சுகத்துடன் வாழ தனக்கு தேவையான சகல சம்பத்துகளும் வாழ ஆடம்பரம் அதிகாரங்கள் அனைத்தும் பெற்று வாழ சுக்கிரன் முக்கியமான தங்கத்தை வகிக்கிறார் .நண்பர்களே சுக்கிரன் 6 8 12 ல் மறைந்தால் அல்லது நீச்சம் அடைந்தால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் வறுமை, களத்திர தோஷங்கள், சொத்து மறைதல் ,செல்வ இழப்பு, கௌரவ பங்கம் ,சுகம் இன்மை ,தன்னுடைய அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை உருவாகும் .மண வாழ்க்கை சிறக்காது ,தொழில் விருத்தி அடையாது, கணவன் மனைவி அன்னியோன்னியம் குறையும், போன்ற கடுமையான பாதிப்புகளை சுக்கிரபகவான் அருள்வார். இதற்கு நாம் செய்யக்கூடிய தாந்திரீக வழிபாட்டு முறைகள் நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய வழிபாடு மிகவும் நமக்கு பலன் தரும் ஒன்று வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு சுக்கிர ஓரையில் விளக்கேற்றி சுக்கிர காயத்ரி மந்திரங்களை ஜெபித்து வருவது மிகப்பெரிய பலம் கொடுக்கும். இரண்டு பெருமாள் சன்னதிக்கு சென்று பெருமாளுக்கு ஆடை வஸ்திரங்கள் நறுமணம் தரக்கூடிய ஜவ்வாது, கற்பூரம்,அரகஜா ,போன்ற அபிஷேகப் பொருட்களை தானமாக வழங்கலாம், மேலும் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமணத்திற்கு தேவையான உதவிகளை தம்மால் இயன்ற உதவிகளை செய்தால் சுக்கிரனுடைய தோஷம் குறையும், சுக்கிரனுடைய ஆலயத்திற்கு நவகிரக ஆலயத்திற்கு சிறப்படைய வழிபாடு செய்வதே நமக்கு நன்மை பயக்கும், ஸ்ரீரங்கநாதரை வழிபாடு செய்தாலும், சனிக்கிழமை விரதம் இருப்பதும் ,வெள்ளிக்கிழமை விரதம், பெருமாளுக்கு இருப்பதும் நமக்கு மிகப்பெரிய பயனைத் தரும், அவருக்கு உரிய தானியமான மொச்சைப் பயறை இரவில் தலைக்கு வைத்துப் படுத்துக் அதிகாலையில் அதை அழித்துவிடுவது பட்சிகளுக்கு உணவிடுவது தோஷத்தை குறைக்கவும், அவருக்குரிய வெண்பட்டு நம் அணிந்து கொண்டாலும் ,வெண்பட்டு இறைவனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் அவருக்கு வஸ்திரங்கள் சாத்தி வந்தாலும், நமக்கு மிகப்பெரிய தோஷங்களை குறைக்கும், அவர் கூறிய தித்திப்பான சுவை யான உணவுகளை படைத்து தானங்களும் ஆலயத்திற்கு வருபவர்கள் பொங்கல் வைத்து பொங்கலை வந்து தானம் செய்து கொள்ளவும் நமக்கு மிகப் பெரிய பலனைக் கொடுக்கும் ,வெள்ளிக்கிழமை தோறும் மட்டுமல்லாமல் தினந்தோறும் இரவில் சூரிய அஸ்தமனம் ஆன பின்பே கண்டிப்பாக மாலையில் விளக்கேற்றி வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும், சுக்கிரன் நீச்சம் ஆனவர்கள் மனை எப்பொழுதும் விளக்கு எரிந்து கொண்டே இருப்பது மிகப்பெரிய பலன் நிரந்தரமாக லட்சுமி வாசம் செய்வதற்கான அர்த்தம், மிகப்பெரிய விஷயம் விளக்கு ஏற்றுவது  நல்ல பலனை நமக்கு தரும், வீட்டில் இருட்டுஅடைந்து கிடக்க கூடாது. ஆலயத்திற்கு விளக்குகளை தானமாக வழங்கலாம் ஆலயத்தில் இருக்கக்கூடிய கர்ப்பகிரகத்தில் விளக்கு ஏற்றுவதற்கான எண்ணெய் தானங்களும் நாமே விளக்கை ஏற்றி ஆலயங்களுக்குச் சென்று ஒவ்வொரு கிரகங்களுக்கும் மூலஸ்தானத்திற்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சுக்கிரதோஷம் நமக்கு குறையும் அம்பாளுக்கு விரதமிருந்து பவுர்ணமி அன்று அன்னதானம் செய்து வந்தால் சுக்கிரனின் தோஷம் குறையும் இவை அனைத்தும் நமக்கு நாமே செய்யும் தாந்த்ரீக பரிகாரங்கள் நமக்கு நன்மை பயக்கும் நம்பிக்கையுடன் செய்யலாம் 

குருவே சரணம்.

சனி பகவான்

நண்பர்களே சனி பகவான் என்ற சொன்னவுடன் அனைவருக்கும் ஒரு விதமான இனம் புரியாத பயம் மனதில் தோன்றும் சனிபகவான் செய்யக்கூடிய நமக்கு தரக்கூடிய கடுமையான பலன்கள் நம்முடைய கர்மாவிற்கு தக்க பலனை அவர் வழங்குவார் பாரபட்சமில்லாமல் நமக்கு செய்த புண்ணியத்திற்கு பாவத்திற்கு தகுந்தாற்போல் கர்ம வினைகளே நமக்கு அருள்பவர் சனிபகவான் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் புண்ணியங்கள் பகுத்து அதன் பலனை நமக்கு அருள்பவர் சனிபகவான் நண்பர்களே தண்டிப்பதில் மனசாட்சி இல்லாமல் தண்டனை வழங்கக்கூடிய கடவுள் சனிபகவான் என்று பேர் செல்லக்கூடிய சனி பகவான் நமக்கு ஆறு எட்டு பன்னிரெண்டில் மறைந்தாலும் நீச்சம் அடைந்தாலும் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஏழரை நாட்டு சனி பாத சனி அஷ்டமச்சனி கண்டச்சனி ஜென்மச்சனி இப்படி பலவாறு இடங்களில் அமர்ந்துநமக்கு பலன்களை அளிக்கக் கூடியவர் சனிபகவான் நாம் அனைவரும் சனிக்கிழமை தோறும் சனிபகவானின் காயத்ரி மந்திரங்களை ஜெபிப்பது காகத்திற்கு எள் சாதம் தயிரில் கலந்து சாதம் வைத்து வணங்குவது காக்கைக்கு உணவு இடுவதே நமக்கு பெரும் பலனை ஈட்டித்தரும் நம் முன்னோர்களுக்கு செய்யாத நண்பன் உங்கள் அதனுடைய பாதிப்புகளை சனி பகவான் நமக்கு குறைத்து தருவார் சனிக்கிழமைதோறும் புதன்கிழமை தோறும் பெருமாள் சந்நிதிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதாலும் பிள்ளையார் சந்நிதிக்கு இரவில் தேங்காய் வாங்கி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி மறுநாள் அதை பிள்ளையார் கோயிலில் சிதறுகாய் போட்டு விளக்கேற்றி வழிபாடு செய்வதாலும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு நெய்விளக்கேற்றி வழிபாடு செய்வதாலும் கலியின் காவல் தெய்வமான பத்ரகாளி அம்மனுக்கு கருநிற ஆடை அணிந்தே அம்பாளுக்கு கருநிற ஆடை சாத்தி கனி மாலை அணிவித்து வழிபாடு செய்து வருவதும் சனியின் தாக்கத்தை குறைக்கும் இரும்பு இயந்திரங்கள் கையாளுவதில் கவனமாக இருக்கவேண்டும் சனிபகவான் குளிர்விக்க சுலபமான வழிமுறைகள் மூத்தவர்களை அதாவது நிர்க்கதியான பரம பராமரிப்பில்லாத பெரியவர்களை சனிபகவானின் தாக்கம் குறையும் மேலும் அங்கஹீனம். உடல் குறைபாடு உள்ளவர்கள் ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் நாம் இயன்ற உதவிகளை செய்து வந்தால் நமக்கு சனிபகவானின் பாதிப்புகள் குறையும் .ஊனமுற்றவர்களுக்கு. நடக்க இயலாதவர்களுக்கு. இருசக்கர வாகனம் ஊன்றுகோல் கருப்பு நிறையுடைய குடைகள் வயதானவர்களுக்கு தாங்கும் கோல் அதாவது தடி வழங்குவது கருப்புநிற கொடை வழங்குவது நமக்கு உறுதுணையாக இருக்கும் .பழமையான சிவாலயங்களுக்கு சென்று விளக்கேற்றி பஞ்சாட்சரம் ஜெபிப்பது சனி பகவானின் உக்கிரத்தைக் குறைக்கும் நண்பர்களே சனிக்கிழமை தோறும் எள் கலந்த சாதங்களை வைத்து நம் வழிபாடு செய்வது மட்டுமல்லாது அன்றைய தினங்களில் இயலாதவர்களுக்கு யாரும் இல்லாதவர்களுக்கு உணவு தானங்களும் ஆடை தானங்களும் அளித்து வந்தால் திருநள்ளாறு குச்சனூர் சனீஸ்வர தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தாலும் எள் தானம் அளித்தால் நமக்கு மிகவும் பலன் தரும் அவருக்கு உரிய கிழமைகளில் அவருடைய ஆலயத்திற்கு செல்வது மிக உத்தமமான பலனை தரும் மக்களை இது நமக்கு நாமே செய்யும் தாந்திரீக மாந்திரீக பரிகாரங்கள் நமக்கு முழு பலனும் தரும் குருவே சரணம். ராம்சரவணன் 

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்