கிரக பரிகாரங்கள்4

 நவகிரக பரிகாரங்கள் 4 

மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தில் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ராகு பகவான் கேது பகவான் சாயா கிரகம் என்று சொல்லக்கூடிய ராகு பகவானும், கேது பகவானும், நம்முடைய ஜாதகத்தில் இன்றியமையாத கிரகங்கள் ஜாதகர்கள் மோட்ச நிலையை அடைய இந்த இரண்டு கிரகங்களும் முக்கியமான அங்கம் வகிக்கக்கூடியவை. நம் செய்யக்கூடிய கர்மவினைகளை பாவங்களை அறிந்து அதற்குத் தக்க பலனைக் கொடுக்கக் கூடிய கிரகங்கள், ஞான மோட்ச காரகன் கேது வைராக்கிய காரன் என்று கூறக்கூடிய ராகு பகவான் கேது பகவான் நம்முடைய ஜாதகத்தில் 6 8 12 மற்றும் நீச்ச ஸ்தானங்களை பற்றி இருந்தால் ஜாதகர்கள் நமக்கு பல நெருக்கடியான சூழல் உருவாகும். தார தோஷம், புத்திர தோஷம், போன்ற கடுமையான தோஷங்களை அளிக்கக் கூடியவர்கள் ராகு பகவான் கேது பகவானும் இவை நாம் செய்யக்கூடிய பாவத்தின் சம்பளம் என்று கூறலாம். இன்னொரு ஜென்மத்தில் செய்யக்கூடிய பாவங்களை கர்மவினைகளை, இந்த ஜென்மத்தில் நமக்கு தண்டனையாக கர்மவினைகளை வழங்குபவர்கள், இந்த இரண்டு கிரகங்களும் சாயா கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு பகவான் கேது பகவான் அவருடைய திசைகள் ராகு திசை 18 வருடதிசையிலும் கடுமையான பலன்களை நமக்கு வழங்கக் கூடிய காலகட்டங்களில் அவர்களுடைய பார்வையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தாந்திரீக மாந்திரீக வழிபாடுகள் சனிக்கிழமைகளில் அல்லது செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களில் வரும் ராகு காலங்களிலும் கேது பகவானை வழிபட எமகண்ட நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதும் ,ராகு காலத்தில் ராகுவின் காயத்ரி மந்திரங்களை தியானம் செய்வதும், எமகண்ட நேரத்தில் கேதுவின் காயத்ரி மந்திரத்தை தியானம் செய்வதும், நமக்கு நல்ல பலன் தரும் .மேலும் உளுந்து ,எள்ளு ,போன்ற தானியங்களில் அன்னம் படையல் வைத்து வழிபாடு செய்வது ,விஷம் தாக்கிய ,விஷம் அருந்திய ,தோல் வியாதிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ,அதாவது குஷ்டரோகிகள் என்று சொல்லலாம் .அவர்களுக்கு நாம் உதவி செய்யலாம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம் இயன்ற உதவிகளை செய்ய மருத்துவ வசதிகள் செய்ய நமக்கு நல்ல பலன்களைத் தரும், ராகு காலத்திலும் ,எமகண்ட நேரத்தில் ,புற்று வழிபாடு செய்தல் நன்மை பயக்கும் .நாக வழிபாடுகள், நாகபஞ்சமி வழிபாடுகள் ,விரதமிருந்து வழிபாடு செய்யலாம். ராகு பகவான் கேது பகவான் தளங்களான காலகஸ்தி திருநள்ளாறு போன்ற ஆலயங்களுக்குச் சென்று தங்கி வழிபாடு செய்து வரலாம் .மிகவும் பழமையான சிவாலயங்களுக்கு மராமத்து பணிகள் செய்யலாம் ,அதாவது பழமையான சிவாலயங்கள் சிதலமடைந்த ஆலயங்கள் வழிபாடு இன்று இருக்கும் ஆலயங்கள் போன்றவற்றிற்கு சென்று நம்முடைய உடல் உழைப்பை அங்கு செலவிட வேண்டும் .இந்த வழிபாடு மிகுந்த பலனை நமக்கு தரும் ,நம்முடைய கர்மவினைகளை குறைப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும் ராகு கேதுவின் தாக்கத்தை தோசத்தை இதை முற்றிலும் குறைக்கும், மேலும் நாகர் சிலைகளை செய்து கல்லினால் ஆன சிலைகளை செய்து ஆலயங்களுக்கு தரலாம் ,அல்லது நம் வீட்டில் நாகர் சிலைகளை வாங்கி வந்து ஒன்பது நாட்கள் 21 நாட்கள் 27 நாட்கள் ஒருமண்டலம் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்து ராகு பகவான் என்றால் ராகுவின் காயத்ரி மந்திரங்களை தினசரி ,கேது என்றால் கேதுவின் காயத்ரி மந்திரங்களை தினசரி, படித்து ஒரு மண்டலத்திற்கு பின் அதை ஆற்றங்கரையில் உள்ள அரசமரத்து, ஆலமரத்து விநாயகரின் பீடத்தில் இந்த நாகரை வைத்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நம்முடைய ராகு-கேது தோஷங்கள் குறையும், இவை அனைத்தும் நமக்கு நாமே செய்யக் கூடிய பரிகாரங்கள்.மேற்கூறிய நவகிரக பரிகாரங்கள் அனைத்தும் தனித்தனியாக செய்வது பற்றி கூறியிருந்தேன், மேலும் 9 நவக்கிரகங்களுக்கும் அதிபதியான சூரிய பகவானே தினசரி காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து சூரிய வழிபாடு செய்து வந்தால் நவகிரகங்கள் மொத்த தோஷங்களும் குறையும். குலதெய்வ வழிபாடு நமக்கு மிகுந்த பலனை கொடுக்கும் ,குலதெய்வம் இல்லாமல் எந்த தெய்வமும் நமக்கு துணை புரியாது .ஆக இந்த ராகு கேது பகவானின் கர்ம வினைகளில் இருந்து விடுபட்ட குலதெய்வ வழிபாடு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. நம் அனைவரும் குலதெய்வமே முதன்மையான தெய்வம் அதை வணங்கி வந்தால்எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் ஆக இருந்தாலும் ,கண்டங்களாக இருந்தாலும் ,நம்மை காக்கும் குலதெய்வங்களை முதன்மையாக வரும் ,அனைவரும் ஆலய வழிபாடுகள் செய்வது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு குலதெய்வத்தின் உடைய அருளும் நமக்கு முக்கியமே குலதெய்வத்தை வணங்காமல் வேறு எந்த தெய்வத்தை வணங்கினாலும் மேற்கூறிய பரிகாரங்கள் அனைத்துமே பலன் கிடைக்க தாமதமாகும் ,என்பது குறிப்பிடத்தக்கது.

 குருவே சரணம் குருவே துணை. ராம்சரவணன் 

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்