சித்தபுருஷர்கள் சொன்ன எளிய இரசமணி செய்முறை
”பாரப்பா சூதங்கட்ட
பட்சமா யொன்று கேளு
வீரப்ப தாளிச் சாறு
விட்டுணு கிரந்தி சாறு
சேரப்பா ஒன்றாய்க் கூட்டி
சுரிங்கிடச் சூதம் கட்டும்
ஆரப்பா சொல்லப் போறா
ரடையலாம் சித்தி பாரே”
கருவூரார் சொல்லும் வழி இது…
பொருள் :-
சூதத்தைக் கட்ட எளிய மார்க்கம் ஒன்று சொல்கிறேன் கேளு, தாளி சாறு, விஷ்ணுகிரந்தி சாறு இரண்டையும் சேர்த்து சூதத்திற்கு சுருக்கிட சூதம் கட்டி மணியாகும்.
“முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு
முதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு
காட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்
ககனம்போற் திரண்டுருண்டு மணியுமாகும்”
போகர் சொல்லும் வழி இது…
பொருள் :-
சூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும்.
“காணும் சுத்தம் செய்த சூதம்
கட்டவே நீகேளடா
பூணு மஞ்ச ணாதிலை
பிழிந்த சாறு சுருக்கிட
வேணு மிரண்டு நாழிகையில்
மெழுகு போலுருண்டிடும்”
பொருள் :-
சுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும்.
இவையே ரச மணி கட்டும் இலகுவான வழிகளாகும்.
Comments
Post a Comment