விருந்துக்கு உகந்த நாள்
குருவே சரணம் குருவே துணை .
மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் அனைவரும் வணக்கம் .நாம் தமிழரின் பாரம்பரியம் கலாச்சாரத்தின் முக்கியமான ஒரு விஷயம் விருந்தோம்பல், அதாவது நம் உறவினர்கள் உற்றார்கள் அனைவரின் இல்லங்களுக்கும், அவர்கள் நம் இல்லங்களுக்கும், வந்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு, நம் இல்லத்தில் அவர்கள் வந்து பசியாறி அவர்களை நம் கவனிக்கும் அக்கறையை அவர்கள் மீது நாம் செலுத்தும் அன்பின் அடையாளம் விருந்தோம்பல் .இன்றைய காலகட்டத்தில் அனைவரும் கூட்டுக்குடும்பம் அல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஏன் எதனால் அந்த சூழல் இந்த விஷயத்தில் கிரக நிலைகளை தெய்வம் நிலைகளும் நம்முடைய வாதங்களும் நம்முடைய குணங்களும் அனைவரையும் ஒதுக்கி வைத்து விடுங்கள் .விருந்தோம்பல் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு நேரங்களில் ,ஒவ்வொரு கிழமைகளில் ,ஒவ்வொரு மாதங்களில் செய்ய வேண்டும். இன்ன இன்ன வேலையை இன்ன இன்ன மாதத்தில்தான் செய்ய வேண்டும் .நாட்களில்தான் செய்ய வேண்டும். இன்று குறித்து வைத்துள்ளனர் .அதில் முக்கியமான ஒரு விஷயம் விருந்தோம்பல் நாம் நண்பர்கள் உறவினர்கள் விசேஷ வீடுகள் இந்த காலகட்டங்களில் உணவருந்தும் நாள் முக்கியமான பங்கு எடுக்கும் நிலை நவகிரகங்களின் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு கிழமையை குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது, அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் எந்த கிழமையில் விருந்து உபசாரம் விருந்தில் கலந்து கொள்வது சில விதிமுறைகள் உள்ளன .இப்பொழுது ஏழு தினங்களில் சூரியனுக்கு உரியது ஞாயிறு ,சந்திரனுக்கு உரியது திங்கள் ,செவ்வாய் கூறியது செவ்வாய், புதன் கிழமை புதன், சுக்ரனுக்குரிய கிழமை வெள்ளி ,சனி பகவானுக்கு உரிய கிழமை சனி ,இப்படி இருக்கும் பட்சத்தில் திங்கள் புதன் வெள்ளி சனி கிழமைகளில் இருந்தும் விருந்தோம்பலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் கலந்து கொள்ளுதல் ஏற்பாடு செய்தல் மிகவும் நன்மை பயக்கும் உறவு நீடிக்கும் .அதை தவிர்த்து வியாழன் அன்று விருந்து நம் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்தல் போன்றவை ஒருவித வெறுப்பு களை உருவாக்கும். நமக்கு நம்ம சொந்தக்காரர்களுக்கு நம்ம நண்பர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தும் .அதே போல ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமையில் இருந்தும் நம் இல்லங்களில் விசேஷ நிகழ்ச்சிகளும் நடத்தினால் நமக்கும் நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தீராத பகை உண்டாகும். இது இன்றைய சூழலில் பல மக்களுக்கு தெரிவதில்லை ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் விடுமுறை ஆகும் பட்சத்தில் அனைவரும் விருந்தில் கலந்து கொள்கின்றனர். நன்றாக கவனித்து பாருங்கள் எத்தனை திருமண நிகழ்ச்சிகளும் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நாம் இன்று வரை ஒற்றுமையாக அதை நடைமுறைப்படுத்தி கொண்டு வருகிறோம் .என்று மக்களை நண்பர்களே மேலே குறிப்பிட்ட திங்கள் புதன் வெள்ளி சனிக்கிழமைகளில் நண்பர்கள் வீட்டுக்கு நம் விருந்துக்கு செல்வதும் நம் வீட்டிற்கு நண்பர்களின் உறவினர்களின் அழைப்பதும் இது ஒரு தாந்த்ரீக முறை அனைவரும் ஒற்றுமையுடனும் வாழும் முறை இது முழுக்க முழுக்க பயன் தரும்ஞாயிறு செவ்வாய் வியாழன் போன்ற கிழமைகளில் உணவருந்த செல்வது உறவினர் வீட்டிற்கு செல்வது நம் வீட்டிற்கு விருந்து அளிப்பது உறவினர்களை அழைப்பது சுப நிகழ்ச்சிகள் நடத்துவது உத்தமமான நாட்கள் அல்ல உறவுகளே பிடிக்கும் நிலைக்கு சென்றுவிடும் குருவே சரணம்.ராம்சரவணன்
Comments
Post a Comment