தனுஷ்டா பஞ்சமி

 தனுஷ்டா பஞ்சமி.

வணக்கம். மாந்திரீக பரிகார பக்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் ஒருவித முன்னேற்றம் இன்றி இனம் புரியாத மனக் கவலையுடன். நோயின்றி மருந்துகள் எடுக்கும் சூழ்நிலை. முழு அர்ப்பணிப்புடன் பணி செய்து அதற்குண்டான பலனை அனுபவிக்க முடியாமல் போவது, எந்த குறைபாடும் இல்லாமல் கணவன் மனைவி இருவரும் வாழும் சூழலில் எவ்வித காரணகர்த்தாவாக இன்றி பிரிந்து வாழும் சூழல், மனம் ஒருவித இறுக்கத்துடன் இருக்கும் நிலை ,குழந்தைகள் அடிக்கடி உடல்நிலை சுகம் இன்மை குடும்ப விருத்தி இன்மை, தொழில் விருத்தி இன்மை ,சமூகத்தில் நம்மை தனிமைப்படுத்துதல்,எப்பொழுதும் ஒரு மன இறுக்கத்துடன் இருக்கும் சூழல், ஏன் கிரகங்கள் திசா புத்திகள் நல்ல நிலையில் இருந்தாலும் கிரக அமைப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் எவ்வித மாற்றமும் பலனும் கிடைக்க வில்லையே ,ஏன் சகலமும் நல்ல நிலையில் இருந்தாலும் தெய்வ வழிபாடு கிரக நிலைகள் குரு வழிகாட்டுதல் இருந்தும், ஏன் இந்த நிலை நாம் அனைவரும் ஒருவித விஷயத்தை மனதில் ஏற்றுக்கொள்வதில்லை நாம் நம் முன்னோர்களுக்கும், மூதாதையர்களுக்கும் ,பித்ருக்களுக்கும், நாம் செய்யவேண்டிய கர்ம காரியங்களை சரிவர செய்யாமல் போவது, இது மிகப்பெரிய காரணம், அனைவரும் இருந்த திதி நட்சத்திரங்களை கண்டு ஆராய்ந்து அந்த நட்சத்திரங்கள் அடப்பு கூறிய நட்சத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் ,நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் மோட்சம் செல்லாமல் இங்கு ஆக்ரோஷமான நிலையில் இருப்பது மிகப்பெரிய காரணம் .அடப்பு கூடிய நட்சத்திரங்கள் அப்படின்னு சொல்லி பார்த்தோம் .பெரியவர்கள் இறந்தால் அடைப்பு இறந்தால் வீடு மூட வேண்டும் என்று கூறுவார்கள் அதாவது தனுஷ்டாபஞ்சமி என்று கூறுவார்கள். அவிட்டம், சதயம் ,பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ,ரோகினி ,கிருத்திகை, உத்திரம் ,மிருகசீரிடம் ,புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராடம், இந்த நட்சத்திரங்களில் நம்முடைய முன்னோர்கள் இறக்க நேரிட்டால் ,அவர்கள் இந்த தனுஷ்டாபஞ்சமி என்றதொரு தேவதையின் பிடியில் சிக்குவார்கள். அதாவது நம் முன்னோர்கள் இந்த நட்சத்திரங்கள் இறக்கும் தருவாயில் நாம் அவர்களுக்குச் செய்யும் சிரார்த்தம்,அதாவது அவர்களுக்கு நாம் கொடுக்கும் அன்னம், உடை ,நற்குணங்கள் அனைத்தும் அவர்களை சென்றடையாது .அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய ஆத்மா நம்மளை நம்மை சுற்றியே இருக்கும் .அதனால் நம்முடைய முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை .காரணம் போதிய விழிப்புணர்வு இல்லை. பெரியவர்கள் இதை பெரிதாக விளங்கும்படியாக சொல்லித் தருவதில்லை. பொதுவாக அடைப்பு நட்சத்திரங்களில் இருந்தால் ஆலயங்களுக்கு என்னை தானம், விளக்கு தானம், கொடுத்தால் போதும் மோட்ச விளக்கு ஏற்றினால் போதும் ,என்ற நிலையில் தான் உள்ளார்கள். பல குடும்பங்கள் பல ஆண்டுகளாக கடந்து வரும் நிலையில் வறுமையும் பிணியும் மட்டுமே மிஞ்சியிருக்கும். அவர்களின் குடும்பத்தில் இதை முறையாக நிவர்த்தி செய்ய வேண்டும் அதாவது அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி இந்த 5 நட்சத்திரங்களும் 6 மாதமும் ,ரோகினி நான்கு மாதமும், கிருத்திகை உத்திரம் மூன்று மாதம், மிருகசீரிஷம் புனர்பூசம் சித்திரை விசாகம் உத்திராடம் 2 மாதமும் மூட வேண்டும் .என்று சாஸ்திர விதிகள் உள்ளது .இதை முறையாக நாம் மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் முறையாக அந்த அடப்பு நட்சத்திரத்தில் இறந்த நம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி படைத்து நம் வாழ்வில் உள்ள தடை. முடக்கம். மன அமைதி இன்மை .முன்னேற்றம் இன்மை .மகிழ்ச்சியின்மை .ஆரோக்கியமின்மை. தைரியமில்லை. பலமின்மை. இதிலிருந்து விடுபட்டு தெய்வ துணையுடன் தெய்வ கடாட்சத்துடன் வாழ்வில் முன்னேற இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள். குருவே சரணம் ராம்சரவணன் 

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்